நமது நாட்டில் வீடு, கடை, ஏடிம் என்று திருடி போரடித்து விட்டதோ என்னவோ.. தற்போது திருடர்கள் தங்களது அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரிசர்வ் வங்கியின் பணத்தை, போலீசுக்கே தெரியாமல் அசால்டாக திருடியுள்ளனர் கொள்ளையர்கள்.

சேலத்திலிருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொண்டு வரப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின், மேலே உள்ள ரயிலில் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.

அந்த கொள்ளையர்களை பிடிக்க ரயில்வே எஸ்.பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில், ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடையில ரிசர்வ் வங்கி பணத்தையே திருடிய கொள்ளையர்கள்




தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் IV பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நில அளவர், வரைவாளர் போன்ற பதவிகளில் 5451 பணியிடங்கள் நிறப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 8. www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016, தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_15_not_tam_grp_iv_services.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

குரூப் IV: 5451 பணியிடங்கள்



உலகின் மிகச்சிறந்த தேடுதளமான கூகுளின் பெண் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக பணிபுரிந்து வந்தவர் இவர்.

பிரிஸ்டன் கிரமத்தில் தனது தாயுடன் வசித்து வந்த மார்கோட்டிக்கு வயது 27 ஆகும். இவர் சம்பவம் நடந்த அன்று வேலைக்கு சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாய் அவரது மொபைலுக்கு தொடர்கொண்டுள்ளார் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மார்கோட்டி அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் மரக்கட்டைகளுக்கு இடையே எரிக்கப்பட்ட பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையின் படி அவரது தலை மற்றும் கால் பகுதிகள் நன்கு எரிந்துள்ளது.

குறைவான மக்களே வசிக்கும் அந்த கிராமத்தில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தீவிரமாக காவல்துறை விசாரித்து வருகிறது.

மார்கோட்டியின் மரணம் குறித்து அவர் பணிபுரிந்த கூகுள் நிறுவனம் இரங்கள் தெரிவித்துள்ளது. அவரது இறப்பு செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கூகுள் நிறுவன பெண் அதிகாரி



பூமியை நோக்கி ஏராளமான விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு மேலே விண்ணில் பல கோடி விண்கற்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தற்போது பூமியை சுற்றியுள்ள புவியிர்ப்பு விசையில் விண்கற்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

இந்த விண்கற்கள் பூமியை நோக்கி விழும், இருந்தாலும் எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஆகஸ்டு மாதத்தில் வழக்கத்தை விட அதிக அளவிலான விண்கற்கள் பூமியை நோக்கி வருவது உண்டு. வருகிற புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் 2 மடங்கு அதிகமான விண்கற்கள் பூமியை நோக்கி வர இருக்கின்றன.

மணிக்கு சுமார் 400 விண்கற்கள் பூமியை நோக்கி வரலாம் என்றும், இரவு நேரத்தில் அதிக விண்கற்கள் எரிந்தபடி வருவதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பூமியை நோக்கி வரும் விண்கற்கள்: நாசா தகவல்



சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில், சில குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிப்பட்டுள்ளதாவது:-

ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கட்டனச் சலுகையில் புக்கிங் செய்துக்கொண்டு, ஆகஸ்டு 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த சலுகை மூலம் பயணம் செய்யலாம்.

உள்நாட்டு போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:399க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், மும்பை-ஐதராபாத், மும்பை-கோவா, கோவை-ஐதராபாத், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-சென்னை ஆகிய வழிதடங்களில் மட்டும் கட்டணச் சலுகையில் பயணிக்கலாம்.

சர்வதேச போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:2,999க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் துபாய்-டெல்லி மற்றும் துபாய்-மும்பை ஆகிய பாதகைகளில் மட்டுமே பயணம் செய்யலாம்.

ரூ:399க்கு விமான டிக்கெட்: சுதந்திர தினம் ஸ்பெஷல்



அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னை திருமணம் செய்துகொண்டதாக போயஸ் கார்டனில் வேலை பார்த்துவந்த பிலால் என்பவர் கூறியதாக தகவல்கள் வந்தன.

இந்த செய்தியை உறுதிபடுத்தும் விதமாக சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இரண்டு இளம்பெண்கள் சசிகலா புஷ்பா மற்றும் பிலால் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.

சசிகலா புஷ்பா தங்களை துன்புறுத்தியது, நிர்வாணமாக படுத்துக்கொண்டு கை, கால்களை அமுக்கி விட சொல்வது, அவரது கணவர் மற்றும் மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது என பல புகார்களை அவர்கள் கூறினார்.

இதில் பிலால், சசிகலா உறவை பற்றி கூறிய அவர்கள், சசிகலா புஷ்பாவுக்கு பிலால் தாலி கட்டினது உண்மைதான் என்றனர். மேலும், சசிகலா புஷ்பா, பிலால் சேர்ந்து தான் இருப்பாங்க. இதைப்பற்றி சசிகலாவின் முதல் கணவரான லிங்கேஸ்வரன் கேட்டால், இது என் தனிப்பட்ட விவகாரம்னு சசிகலா புஷ்பா கூறுவார்.

சசிகலா புஷ்பாவுடன் சேர்ந்து பிலாலும் தங்களை கொடுமை படுத்தியதாக கூறிய அவர்கள், நாங்க அப்பதான் தூங்க சொல்வோம், உடனே பிலால் வந்து, எங்களை எழுப்பி விட்டு போய் அக்காவுக்கு கை, கால் அமுக்கி விடுங்கனு சொல்வாறு என அடுக்கடுக்காக பல புகார்களை அந்த இளம் பெண்கள் கூறினர்.

பிலாலுக்கும் சசிகலா புஷ்பா மனைவிதான்: இரண்டு கணவர்களுடன் வாழ்ந்ததாக குற்றச்சாட்டு



இந்தியாவில் உள்ள வீடுகளில் ரூ:78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் உள்ளன என்று ஓ.எல்.எக்ஸ். நிறுவனம் ‘கிரஸ்ட்’ என்ற ஆய்வு நடத்தியன் மூலம் தெரிவித்துள்ளது.

பழைய, பயன்படுத்திய பொருட்களை விறப்னை செய்வதற்கும், வாங்குவதற்கும் இணையதளம் மூலம் வழி வகுத்து சேவையை வழங்கி கொண்டிருக்கிறது ஓ.எல்.எக்ஸ். நிறுவனம்.

பழைய பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய 'கிரஸ்ட்' என்ற ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது:-

அதிக அளவிலான பொருட்களை வாங்கி குவிப்பது அனைவரிடமும் பழக்கமாக மாறிவிட்டது. புதிய பொருட்கள் வாங்கிய சில நாட்களுக்குள்ளே சலிப்படைந்து விடுவதும், புதிய பொருட்களை மட்டுமே கையில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், மனோபாவமும் தான் பழைய, பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய தூண்டுகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் சராசரியாக பழைய பயன்படுத்திய 12 உடைகள், 14 சமையல் பாத்திரங்கள், 11 புத்தகங்கள், 2 மொபைல் போன்கள் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் தேங்கிக் கிடக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் ரூ.78,300 கோடி மதிப்பிலான பயன்படுத்திய பொருட்கள் தேங்கியுள்ளன. பழைய பொருட்களை வீடுகளில் தேக்கி வைப்பதிருப்பதில் டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

வீடுகளில் உள்ள பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு ரூ:78,300 கோடி: ஓ.எல்.எக்ஸ். ஆய்வு தகவல்



ஈஷா மையத்தில் இருந்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி திங்களன்று துத்துக்குடியை சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.

தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன், சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும், அதனால் தனது மகன்கள் மனநல பாதிப்புக்கு உள்ளானதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனை சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். இதில் ஈஷா மையத்தில் சிக்கியுள்ள தனது மகனை மீட்டுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்

இதுகுறித்து ஈஷாவில் மகனை பறிகொடுத்த தமிழ்ச்செல்வி கூறுகையில், "சிங்கப்பூரில் பணிபுரிந்த தனது மகன் ரமேஷ் என்பவர் அங்கு நடைபெற்ற ஈஷாவின் யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். இங்கு தனது மகனை மூளைச்சலவை செய்துள்ளதுடன் ஓரு விதமான மயக்க மருந்தும் கொடுத்துள்ளனர். தனது மகனை தனியாக பார்த்து பேச கூட ஈஷா யோகா மையத்தினர் விடுவதில்லை.

குறிப்பாக, ரமேசின் தாத்தா மற்றும் பாட்டி இறந்துபோனபோது கூட வீட்டுக்கு அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தற்போது தனது கணவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவரை சந்திக்க கூட விடாமல் ஈஷா நிர்வாகத்தினர் மூளைச்சலவை செய்து தங்க வைத்து இருப்பதாகவும் தமிழ்செல்வி தெரிவித்தார்.

ஈஷாவிடம் இருந்து மகனை மீட்டுத் தாருங்கள்’ : தாய் கண்ணீர்



சேலத்திலிருந்து சென்னை புறப்பட்ட ரயிலில் கொண்டு செல்லப்பட்ட, ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்திலிருந்து நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி பணம், பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. இதற்காக ஒரு தனி பெட்டியே ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களிடம் இருந்து பழைய நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு புதிய நோட்டுகளை கொடுக்கும். அப்படி பெறப்பட்ட பழைய நோட்டுகள்தான் அந்த ரயிலில் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை எழும்புரில், அந்த பணத்தை எடுத்துச் செல்ல அதிகாரிகள் சென்ற போது, ரயிலில் மேற்கூரையில் ஓட்டையிட்டு அங்கிருந்த பெட்டிகளை உடைத்து அதிலிருந்து பல கோடி பணம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதன்பின் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள். இத்தனை கோடி பணத்தை கொண்டு வரும்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்யவில்லை. இதுவே கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ரயில் விருதாசலத்தில் ரயிலின் இன்ஜினை மாற்றுவதற்காக ஒன்றரை மணிநேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அங்குதான் இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று போலீசார் கருதுகிறார்கள்.

பணம் இருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் சரியாக ஒருவர் உள்ளே நுழையும் அளவுக்கு ஓட்டையிடப்பட்டு பல கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு என்ன அதிகாரிகள் கணக்கிட்டு செய்து வருகின்றனர்.

ஆனால், கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபடும்போது, ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர் கூட கண்கானிக்கவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திறைமையான கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.342 கோடி; கொள்ளை போனது எவ்வளவு?



நகைக் கடையில் கொள்ளையடிக்கும் திருடர்கள் : வீடியோ வெளியீடு



மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தன்னை அடித்து துண்புறுத்தியதாகவும், அவரது மகன், கணவர் ஆகியோர் தன்னை பாலியல் துணபுறுத்தல் செய்ததாகவும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் புகார் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்தார், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என மாநிலங்களவையில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் வருகின்றன.

சசிகலா புஷ்பா தன்னிடம் 20 லட்சம் பணம் வாங்கிகொண்டு ஏமாற்றியதாக ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் அவர் மீது புகார் ஒன்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் சென்னை மற்றும் தூத்துக்குடி வீட்டில் வேலை செய்த பானுமதி என்பவர் அவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ளார். அதில், சசிகலா புஷ்பா தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது கணவரும், மகனும் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தந்ததாகவும் கூறியுள்ளார்.

சசிகலா புஷ்பாவின் கணவர், மகன் மீது பாலியல் வழக்கு: வேலைக்கார பெண் பகீர் புகார்



இன்று மக்களவையில் நடந்த ஓட்டெடுப்பின் மூலம் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு அதிமுக வெளிநடப்பு செய்தது.
மத்திய அரசு சமீபத்தில் தேசமெங்கும் பொதுவான ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது. அதுகுறித்த மசோதாவை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் பிரதமர் மோடி மசோதா குறித்து பேசினார்.

அதன்பின், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அதன்பிறகு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஓட்டெடுப்பு அறிவித்தார். ஆனால், அந்த மசோதாவில் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி அ.தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் 443 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஜி.எஸ்.டி மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

மக்களவையில் நிறைவேறிய ஜி.எஸ்.டி மசோதா : அதிமுக வெளிநடப்பு



சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் ராம்குமாரை வருகிற 17ஆம் தேதி, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஏற்கனவே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின், அவரை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திற்கு அழைத்த சென்ற போலீசார், அவர் எப்படி அந்த கொலையை செய்தார் என்று நடித்து காட்டச் சொல்லி வீடியோ எடுத்தனர்.

அதன்பின், சமீபத்தில் சுவாதியின் நண்பர் என்று கூறப்படும் பிலால் மாலிக் உட்பட, சுவாதியின் தோழிகள் 5 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலமும் பெறப்பட்டது.

இந்நிலையில், ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காக, அனுமதி கேட்டு போலீசார், எழும்பூர் நிதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இதை விசாரித்த நீதிபதி, வருகிற 17ஆம் தேதி ராம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அங்கு நீதிபதி முன்னிலையில் அவர் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராம்குமாரின் கையெழுத்தை ஒப்பிட்டு பார்க்க அனுமதி : நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவு



திடீர் திருப்பமாக, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்து ரூ.570 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே எஸ்பிஐ வங்கி அந்த பணம் தங்களுடையது என உரிமை கோரியது. ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இவ்வளவு பணத்தை எடுத்து செல்லும்போது சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரனை செய்யப்பட வேண்டும் என்று திமுகவின் செய்தி தொடர்புத்துறை செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன்பின் விசாரணையில் இறங்கிய சிபிஐ, முதல் கட்ட விசாரணைக்குப்பின் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. முக்கியமாக, பணத்தை கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்களும் போலி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிபிஐ விசாரணையில், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. இதில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.570 கோடி விவகாரம் ; கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி : சிபிஐ வழக்குப்பதிவு



சென்னை நந்தனம் பகுதியில் கால் டாக்சி டிரைவர் ஒருவர் அவரது மனைவி மற்றும் குழந்தையை காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் நாகராஜ், அவரது மனைவி பிரமா மற்றும் 2 வயது மகனுடன் காரில் சென்றுள்ளார். நந்தனம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு அவரது மனைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் அவரது மனைவி பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி கொண்டு தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். உடனே அவர் காரை நிறுத்திவிட்டு தீப்பெட்டியை எடுத்து தீவைத்துள்ளார். தீப்பற்ற தொடங்கியவுடன் குழந்தையை அவரது மனைவி காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டார்.

கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரிலிருந்த பிரேமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் துறையினர் அந்த கால் டாக்சி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

குடும்பத்தை காருக்குள் வைத்து எரித்த கால் டாக்சி டிரைவர்



மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சூலப்புரம் அருகில் உள்ள உலைப்பட்டி என்ற கிராமத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் ஐந்து சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

பள்ளிக்கு சென்ற அந்த சிறுவர்களுக்கும், வேறு சில மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாதியின் பேர் சொல்லி அவர்களை சில மாணவர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர்கள் மீது கற்கள் கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு விடாமால், மேல் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், அந்த ஐந்து மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாய் தெரிகிறது.

ஆனால், பள்ளியில் படிக்கும் சகமாணவர்களுடன் ஏற்பட்ட சாதாரண பிரச்சனைக்கு போலீசார் இப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று ஆவேசப்படுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

அந்த சிறுவர்களுக்கு ஆதாரவாக களம் இறங்கியுள்ள வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் இதுபற்றி கூறும்போது “இது சாதி ரீதியான வழக்கு. உயர் ஜாதி சமூகத்தை திருப்திபடுத்துவதற்காக, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் மீது மதுரை போலீசார் இப்படி ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகளை பாதுக்காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை, குழந்தைகளின் மீதே பயன்படுத்தியிருப்பது, அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மதுரை காவல்துறை எஸ்.பி “இதுபோன்ற வழக்குகளில் ஏற்கனவே, பின்பற்றப்பட்ட நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவர்கள், பிளேடு மூலம் சிறுவர்களின் கையை கிழித்துள்ளனர். குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளார்கள். எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

சிறுவர்கள் மீது பாலியல் வழக்கு : மதுரையில் அதிர்ச்சி



சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக உளவுத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற காவலர் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.

தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன் கூறுகையில், ”ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருத குருகுல பள்ளி குறித்து தொடர்ச்சியாக வந்த செய்திகளால் எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.

இதனையடுத்து எனது மூத்த மகனை 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம். இதனையடுத்து 2014இல் எனது இளைய மகனை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம்.

இந்நிலையில் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

இதனையடுத்து கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷா மையத்தில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார்.

என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இதனையடுத்து மதுரைக்குச் சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து தெரிவித்தனர்.

இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் லட்சக்கணக்கில் பணமும் பறித்துக்கொண்டு மகன்களையும் கொடுமைப்படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. நான் காவல்துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன்.

ஈஷா யோகா மையத்தினர் என்னிடம் ஒன்பது லட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனக் கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர். கடந்த பல மாதங்களாக எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக்கூடாது எனப் பலரிடமும் சொல்லி வந்தேன்.

ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈசா யோகா மையத்தின் முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும் அப்படியான வேதனை அனுபவிக்கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன்” என்றார்.

’ஈஷா மையத்தின் சித்ரவதைகள்’ - முன்னாள் உளவுத்துறை காவலர் குமுறல்



அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை பதவி விலக வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் மாநிலங்களவையில் கூறினார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய சசிகலா புஷ்பா பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். பின்னர் டெல்லி போலீசில் ஜெயலலிதா மீது புகார் அளித்தார். இப்படி அடித்தடுத்து அதிரடிகளில் இறங்கிய சசிகலா புஷ்பா விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சசிகலா புஷ்பா மீது திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக சார்பில், தன்னை தமிழக முதல்வர் தாக்கியதாக ஆதாரம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். அதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலை துறையில் காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, இதுவரை ஒப்பந்தம் வாங்கித்தராததோடு, பணத்தை திருப்பி கேட்கும்போது கொலை மிரட்டல் விடுவதாக சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அதிமுக கவுன்சிலர் வெள்ளைப் பாண்டியை சசிகலா புஷ்பாதான் கூலிப்படை மூலம் கொலை செய்தார் என்று அவரது மகள் பிரச்சனை கிளப்பினார். ஆதாரமாக சசிகலா புஷ்பாவின் செல்போன் உரையாடல்கள் உள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் கொடுத்தார்.

அப்போது சசிகலா புஷ்பா செல்வாக்கில் இருந்ததால் அந்த வழக்கில் அவரை ஒன்றும் பண்ண முடியவில்லை. இப்போது அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வெள்ளைப்பாண்டியின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளார்கள் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே சசிகலா புஷ்பா விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா தமிழகம் வரும் பட்சத்தில் அவரது கைது நடவடிக்கை இருக்குமாம், எனவே தான் சசிகலா புஷ்பா, பாஜக, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். அவர்களது ஆதரவை பெற்று தப்பிக்கலாம் என சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

சசிகலா புஷ்பா விரைவில் கைது: காத்திருக்கும் கொலை வழக்கு!



தரைவிரிப்பில் அமர்ந்து இடது பாதத்தை வலது அடித்தொடையை தொடச் செய்து, வலது பாதத்தை இடது கணுக்காலின்மீது வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது வலது குதிங்கால் அடிவயிற்றைத் தொட்டு இருக்க வேண்டும். மேலும், இரு கைகளும் முழங்கால்களின் மேல் சின்முத்திரையில் வைக்க வேண்டும்.

இரு கைகளையும் சின் முத்திரை தாங்கி கால் முட்டிகள் மீது வைத்து மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

நமது உடலில் உள்ள 72,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்யும் எளிதான ஆசனம் இது. முதலில் தரையில் அமருங்கள். பின்னர் இடது காலை மடித்து வலது கணுக்காலில் படும்படி மடித்து அமருங்கள். அடுத்தது வலது காலை மடித்து இடது தொடை மீது படும்படி செய்யுங்கள்.

பிறகு கைகளை சமநிலைக்கு கொண்டு வந்து பின்னர் நிதானமாக ஒவ்வொரு காலாக பிரித்து நிமிர்த்தி அமர்ந்த பின் எழ வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் மனம் அமைதி அடையும். ரத்த ஒட்டம் சீராகும். பின்புறம் மற்றும் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறையும்.

சித்தாசனத்தின் பயன்கள்:

மார்பு விரிவடையும்.
முதுகெலும்பு, தேகம் பலமடையும்.
மனம் சாந்தமாகும்.

டென்ஷனை குறைக்கும் சித்தாசனம்