ஆணாக நடித்து பெண்ணை திருமணம் செய்த பெண்
தன்னை ஆண் என ஏமாற்றி ஒரு பெண்ணை திருமணம் செய்த பெண்ணைப்பற்றிய அரிய சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் வசிப்பர் சுவார்டி. இவர் ஒரு பெண். ஆனால், தன்னை ஆண் என ஏமாற்றி ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். சுவார்டி தனக்கு ஒரு ஆண் பெயரை சூட்டிக் கொண்டு, ஹெனியடி (21) என்ற ஒரு பெண்ணை ஏமாற்றி கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். ஆனால், சுவார்டி அவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவில்லை. இதனால் ஹெனியடிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சுவார்டியை கண்கானித்து வந்துள்ளார். அப்போது, சுவார்டியின் பர்ஸில் இருந்த அவருடைய அடையாள அட்டையை எடுத்து பார்த்த போதுதான் அவர் ஒரு ஆண் என்பது ஹெனியடிக்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சுவார்டி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டு சட்டபடி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுவார்டிக்கு 7 வருடம் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment