நோய் எதிர்ப்பு திறன் குறைந்தால் என்ன ஆகும்?

Share this :
No comments

நரம்பு தொடர்பான மற்றும் மூளையின் ஏற்பட்ட பாதிப்பால் உண்டாகும் நோய்களான ஆட்டிஸம் மற்றும், ஸீஜோஃப்ரேனியா போன்றவைகளுக்கும் நோய் எதிர்ப்பு திறனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில், நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும், மூளையின் செயலுக்கும் மற்றும் மனித நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அறிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் நோய் எதிர்ப்பு மண்டலம். நேரடியாக மூளையின் செயலை பாதிக்கின்றது. மேலும் நரம்புகளுக்கும் மூளைக்கும் ஏற்படும் தகவல் பரிமாற்றத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது என்று கூஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஹைபர் ஆக்டிவ் : நோய் எதிர்ப்பு அமைப்பு (IFN-?) என்ற புரொட்டின் சுரக்கும். இந்த கெமிக்கல்தான் மூளையின் வளர்ச்சிகளை தூண்டும். இந்த (IFN-?) புரதத்தை தடை செய்தால்

ஹைபர் ஆக்டிவ் மற்றும் கட்டுப்பாடற்ற ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும் மாற்றங்கள் ஏற்படும். அதே அந்த (IFN-?) புரதத்தை சுரக்கச் செய்தால், இயல்பான மற்றவர்களை போல இருக்க முடியும்.

இந்த சோதனையை பரிசோதனை எலிகளுக்கு சோதனை செய்து பார்த்ததில் , இவ்வாறான மாற்றங்கள் தெரியவந்துள்ளது.

ஆகவே நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்போது, இந்த (IFN-?)புரத சத்தும் அதிகரிக்கும். இதனால் மூளையின் செயல்கள் கட்டுக்குள் வைத்திருக்கும். 

ஆனால் நோய் எதிர்ப்பு திறன் குறையும்போது இந்த புரதம் குறைந்த நரம்பு மற்றும் மூளையின் பாதிப்புகளை உண்டாக்கும். இதனால்தான் ஆட்டிஸம், ஹைபர் ஆக்டிவ் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன.

No comments :

Post a Comment