Monday, August 8, 2016

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி - பூண்டு சட்னி


இஞ்சி - பூண்டு சட்னி பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்தாக பயன்படும்.

தேவையான பொருள்கள்

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,

பச்சை மிளகாய் - 12,

புளி - எலுமிச்சை அளவு,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

உப்பு - தேவையான அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு,

கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

* பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

* இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.

* சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.

* இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.

No comments:

Post a Comment