Sunday, July 31, 2016

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி


கொத்தமல்லியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லியுடன் பட்டாணி சேர்த்து செய்யும் இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப்

கொத்தமல்லி - 1 கட்டு

வரமிளகாய் - 4

சீரகம் - 1 டீஸ்பூன்

புளி - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

பச்சைப்பட்டாணி - 25 கிராம்

தாளிக்க :

கடுகு - சிறிதளவு

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிக்கை

பூண்டு - 10 பல்

செய்முறை :

* அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.

* கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிக்சியில் கொத்துமல்லி தழை, புளி, சீரகம், மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் அரைத்த விழுது, பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.

* கம கமக்கும் கொத்துமல்லி பட்டாணி சாதம் ரெடி.

No comments:

Post a Comment