தினமும் சுடுதண்ணீரில் இஞ்சி, மஞ்சள்தூள் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Share this :
No comments

மஞ்சள் மற்றும் இஞ்சி, இந்த இரண்டு உணவுப் பொருட்களுமே தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை. 

மிகுதியாக அல்ல, ஓர் சிட்டிகையளவு சேர்த்துக் கொண்டாலே உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்த நன்மைகள் ஏற்படுத்தக் கூடிய மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருட்கள் இவை இரண்டும்.

டீ என்பது மனிதர்கள் தங்களை தாங்களே உத்வேகப்படுத்திக்கொள்ள, சுறுசுறுப்பாக இயங்க பருகும் பானமாக திகழ்கிறது. பலவகை டீ இருக்கின்றன.

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ! அதில் ஒரு மூலிகை வகை டீ தான் இந்த மஞ்சள், இஞ்சி டீ. இதை எப்படி தயாரிப்பது, இதை தினமும் குடிப்பதால் பெறும் அற்புத நன்மைகள் என்னென்ன என்று இனிக் காண்போம்...

தேவையான பொருட்கள்:

இயற்கை மஞ்சளின் வேரில் இருந்து அரைக்கப்பட்ட தூய மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - ஓர் சிறிய துண்டு

சுடுதண்ணீர் - ஒரு கப்

வைட்டமின் சத்துக்கள்: சுடுதண்ணீரில் மஞ்சள், இஞ்சி கலந்து குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..., வைட்டமின் A, B6, C, E மற்றும் K.

செய்முறை:

1) கடாயில் இஞ்சி மற்றும் மஞ்சளை நீருடன் சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்கவும்.

2) 15 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டு, எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து பருகவும்.

இந்த டீயை குடித்து வருவதால் பெறும் நன்மைகள் பற்றி இனிக் காணலாம்...

பாக்டீரியாக்களை அழிக்க

கொலஸ்ட்ராலை குறைக்க

ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகரிக்க

உடலில் கட்டிகள் உருவாகாமல் இருக்க

காயங்கள் வேகமாக குணமாக.


மேலும் இந்த டீயை தொடர்ந்து பருகி வந்தால்...

கணையத்தின் செயற்திறன் அதிகரிக்கும்

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய முடியும்.

கல்லீரல் செயல்பாடு மேலோங்கும்.

குடலின் ஆரோக்கியம் வலுபெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குறிப்பு! இந்த டீயை நீங்கள் ஒருநாளுக்கு ஒருமுறை மட்டும் தான் குடிக்க வேண்டும்!











No comments :

Post a Comment