மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

Share this :
No comments

இந்த மோர்குழம்பில் மிளகு சேர்ப்பதால் சளி தொல்லை இருப்பவர்களும் சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 100 கிராம்,

அரிசி - ஒரு டீஸ்பூன்,

மிளகு - 20,

கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மோர் - 250 மில்லி,

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* சேனைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும்.

* மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மிளகு - அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாள், வெந்தயத்தை போட்டு தாளித்துச் மோரில் சேர்த்து இறக்கவும்.

* சுவையான மிளகு மோர்க்குழம்பு ரெடி.

குறிப்பு: ரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உடையது மிளகு... நோய்களை குணப்படுத்தும் சக்தியும் வாய்ந்தது.

No comments :

Post a Comment