தமிழக சட்டசபையில், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர். அதிமுக வலையில் திமுக சிக்கிவிட்டதாக அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைமீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்எல்ஏ கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் அமைச்சர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்வதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.
இதில் ஒரு அரசியல் சூச்சுமம் உள்ளது. அது தெரியாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment